மாலையில் படியுங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் உண்ணாவிரதம்

ஈரோடு,மே27: ஈரோடு காளை மாட்டு சிலை அருகே, தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் சார்பில் மண்டல அளவிலான உண்ணாவிரத போராட்டம் நடந்தது. புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், அகவிலைப்படி உயர்வை ஒன்றிய அரசு வழங்கும் அதே நாளில், அதே விகிதத்தில் வழங்க வேண்டும். அமைச்சு பணியாளர்கள், தொழில் நுட்ப ஊழியர்களின் ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும், காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். காப்பீடு திட்டத்தை அரசே ஏற்று நடத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து நடைபெற்ற இப்போராட்டத்திற்கு திருப்பூர் மாவட்ட தலைவர் செந்தில்குமார் தலைமை வகித்தார். ஈரோடு மாவட்ட செயலாளர் வெங்கிடு, மாநில துணை தலைவர் மகாவிஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். போராட்டத்தில் மண்டல நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

The post மாலையில் படியுங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் உண்ணாவிரதம் appeared first on Dinakaran.

Related Stories: