மருத்துவமனை ஊழியருக்கு வெட்டு கணவர் கைது

பெரம்பூர், மே 27: புளியந்தோப்பு விஓசி நகர் 6வது தெருவை சேர்ந்தவர் வளர்மதி (48). இஎஸ்ஐ மருத்துவனையில் ஊழியராக வேலை செய்து வருகிறார். இவரது கணவர் முத்து, இவர், கடந்த சில நாட்களாக மனைவி வளர்மதியுடன் தகராறில் ஈடுபட்டு, அடித்து துன்புறுத்தியதாக கூறப்படுகிறது. இதனால், தம்பதி இடையே நேற்று தகராறு ஏற்பட்டது முத்து வீட்டிலிருந்த கத்தியை எடுத்து வளர்மதியின் தலையில் வெட்டியுள்ளார். அலறல் சத்தம்கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர், வளர்மதியை மீட்டு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு, அவர் சிகிச்சை பெற்று, இதுகுறித்து புளியந்தோப்பு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார், முத்து மீது பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிந்து, கைது செய்தனர்.

The post மருத்துவமனை ஊழியருக்கு வெட்டு கணவர் கைது appeared first on Dinakaran.

Related Stories: