அனைத்துத்துறை வளர்ச்சித்திட்ட பணிகள் செயல்பாடு

கரூர், மே 26: கருர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் அனைத்து துறைகளில் செயல்படுத்தப்படும் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து கலெக்டர் பிரபு சங்கர் தலைமையில், மாவட்ட கண்காணிப்பாளர் மற்றும் மீன்வளத்துறை ஆணையர் பழனிசாமி ஆய்வு மேற்கொண்டார். ஆய்வுக் கூட்டத்தில், வேளாண்மைத்துறையின் கீழ் செயல்படுத்தப்படும் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம், ஊரக வளர்ச்சித்துறையின் கீழ் செயல்படுத்தப்படும் திட்டம், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம், சமத்துவபுரம் (பழுது மற்றும் சீரமைப்பு) உங்கள் தொகுதியில் முதலமைச்சர், நகராட்சி நிர்வாகத்தின் கீழ் செயல்படுத்தப்படும் திட்டங்கள்.

ஜல் ஜீவன் மிசன், பாரத இயக்கம் 2.0, பள்ளிக் கல்வித்துறையின் கீழ் செயல்படுத்தப்படும் திட்டங்கள், இல்லம் தேடி கல்வி, எண்ணும் எழுத்தும் இயக்கம்,இ நான் முதல்வன், மகளிர் திட்டம், முதல்வரின் காலை உணவுத் திட்டம், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் கீழ் ஊட்டச்சத்தை உறுதி செய் திட்டம், சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை கீழ் மக்களை தேடி மருத்துவம் போன்ற திட்டப் பணிகள் குறித்து துறை அலுவலர்களுடன் மாவட்ட கண்காணிப்பாளர் மற்றும் மீன்வளத்துறை ஆணையர் பழனிசாமி ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து, தாந்தோணி ஒன்றியம் மணவாடி கிராமத்தில் சுகாதாரத்துறையின் கீழ் செயல்படுத்தப்படும் மக்களை தேடி மருத்துவம் மூலம் பயனாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் முறையை மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.

பின்னர், இதே கிராமத்தில் பொக்கிஷம் ஊட்டச்சத்து பெட்டகத்தினை ஒரு கர்ப்பிணிக்கு வழங்கினார். காட்டூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ரூ. 61.15 லட்சம் மதிப்பில் வகுப்பறை கட்டிடங்களுக்கான கட்டுமான பணிகளை பார்வையிட்டு பணியின் தன்மை குறித்து கேட்டறிந்து, விரைந்து முடிக்க அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். கிருஷ்ணராயபுரம் தாசில்தார் அலுவலகத்தில் அலுவலக செயல்பாடுகள் குறித்தும், பதிவேடுகள் பராமரித்தல் குறித்தும் ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து 2 நபர்களுக்கு இலவச வீட்டு மனைப் பட்டாகளுக்கான ஆணைகளையும் வழங்கினார்.

பின்னர், சிந்தலவாடி ஊராட்சி மகிளிப்பட்டி கிராமத்தில் விவசாயி ஒருவர் நிலத்தில் வேளாண் பொறியியல் துறை சார்பாக அமைக்கப்பட்ட சூரிய சக்தியால் இயங்கும் 10 எச்பி கொள்ளளவு கொண்ட மோட்டாரை பார்வையிட்டு, செயல்விளக்கம் மற்றும் பயன்பாடு குறித்தும் விவசாயிடம் கண்காணிப்பாளர் கேட்டறிந்தார். இந்நிகழ்வில், மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணன், திட்ட இயக்குநர்கள் வாணி ஈஸ்வரி, சீனிவாசன், கோட்டாட்சியர்கள் ரூபினா, புஷ்பாதேவி, தனித்துணை ஆட்சியர் சைபுதீன் உட்பட அனைத்து துறை அலுவலர்களும் கலந்து கொண்டனர்.

The post அனைத்துத்துறை வளர்ச்சித்திட்ட பணிகள் செயல்பாடு appeared first on Dinakaran.

Related Stories: