பிரண்டை வற்றல்

தேவையான பொருட்கள்:

அரிசி – அரை கிலோ
பிரண்டை – கால் கிலோ (பொடியாக நறுக்கியது)
காய்ந்த மிளகாய் – 3
பச்சை மிளகாய் – 3
மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன்
பெருங்காயத் தூள் – 1 டீஸ்பூன்
உப்பு – தேவைக்கேற்ப
எண்ணெய் – தேவைக்கேற்ப.

செய்முறை:

அரிசியைக் கழுவி, தேவையான தண்ணீர் சேர்த்து, குழைய வேக வைத்துக்கொள்ள வேண்டும். பிரண்டை மற்றும் மிளகாயை சிறிது எண்ணெய் சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ளவும். வதக்கியவற்றை நன்கு ஆற வைத்து, மிக்சியில் அரைத்துக் கொள்ளவும். குழைய வேக வைத்துள்ள சோற்றுடன், அரைத்த பிரண்டை கலவையை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். கலவை கெட்டியாக இருக்க வேண்டும். இதனுடன் தேவையான உப்பு, மஞ்சள் தூள், பெருங்காயத் தூள் சேர்த்துக் கொள்ளவும். இதனை நன்றாக கலந்து, சிறிய நெல்லிக்காய் அளவுக்கு, சிறிது சிறிதாக ஒரு சுத்தமான துணி அல்லது பிளாஸ்டிக் பேப்பரில் வைத்து, 4 அல்லது 5 நாட்கள் நன்றாக காயவைக்க வேண்டும்.
பின்னர் ஒரு வாணலியில் எண்ணெயை ஊற்றி, நன்கு காய்ந்ததும், காய வைத்துள்ள வற்றலைப் போட்டு பொரித்தெடுத்தால் பிரண்டை வற்றல் ரெடி.

The post பிரண்டை வற்றல் appeared first on Dinakaran.