ஆந்திராவில் கைதான கொள்ளையனை கஸ்டடி எடுத்து 10 பவுன் நகையை மீட்பு

ஈரோடு,மே25: ஆந்திராவில் கைதான கொள்ளையனை ஈரோடு போலீசார் கஸ்டடி எடுத்து 10 பவுன் நகையை மீட்டனர். கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை பகுதியை சேர்ந்தவர் திருப்பதி (35).இவர், மீது ஈரோடு உட்பட பல்வேறு மாவட்டங்களிலும், ஆந்திரா,கர்நாடகா மாநிலங்களிலும் ஏராளமான கொள்ளை வழக்குகள் உள்ளன. திருப்பதி கடந்த சில மாதங்களுக்கு முன் ஈரோடு வடக்கு போலீஸ் எல்லைக்கு உட்பட்ட ஓய்வு பெற்ற தலைமையாசிரியர் வீடு உட்பட 2 வீடுகள், சித்தோட்டில் 2 வீடுகள் என 4 இடங்களில் நகை, பணத்தை கொள்ளையடித்து தலைமறைவானார்.

The post ஆந்திராவில் கைதான கொள்ளையனை கஸ்டடி எடுத்து 10 பவுன் நகையை மீட்பு appeared first on Dinakaran.

Related Stories: