ஜூன் 1ம்தேதி மீனவர் குறைதீர்க்கும் கூட்டம்

மயிலாடுதுறை, மே 25: மயிலாடுதுறை மாவட்டத்தில் மீனவர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வரும் 1.6.2023 அன்று கலெக்டர் மகாபாரதி தலைமையில் நடைபெற உள்ளது.மயிலாடுதுறை மாவ ட்ட கடற்பகுதியில் உள்ள மீனவர்களுக்கு மீனவர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அலுவலக, குறைதீர் நாள் கூட்ட அரங்கில் மாவ ட்ட கலெக்டர் தலைமையில் வரும் 1.6.2023. அன்று காலை 10 மணிக்கு நடைபெற உள்ளது.எனவே மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை மற்றும் இதர அரசுத்துறைகளால் நிறைவேற்றப்பட வேண்டிய மீனவர்களின் குறைகள், கோரிக்கைகள் மற்றும் தேவைகள் அடங்கிய மனுக்களை மீனவர் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் நேரில் வழங்கலாம், கலெக்டர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

The post ஜூன் 1ம்தேதி மீனவர் குறைதீர்க்கும் கூட்டம் appeared first on Dinakaran.

Related Stories: