இருதரப்பு மோதலில் 3பேர் கைது

தேன்கனிக்கோட்டை, மே 24: கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி அருகே தக்கட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சிக்க நரசப்பா(27). இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த உறவினர்கள் கங்காதரன்(32), பைராஜ்(40), குமரேசன்(22) மற்றும் லிங்கப்பா(50) ஆகியோருக்குமிடையே, நிலத்தை பிரிப்பது தொடர்பாக முன் விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில், அவர்கள் 4பேரும் சேர்ந்து சிக்க நரசப்பா மற்றும் அவரது தம்பி நரசராஜ்(32), தந்தை நரசப்பா(60) ஆகியோரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர். இதில், காயமடைந்த 3 பேரும் தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுதொடர்பாக சிக்க நரசப்பா அஞ்செட்டி போலீசில் புகார் கொடுத்தார். இதன்பேரில், போலீசார் வழக்குப்பதிந்து கங்காதரன், பைராஜ், குமரேசன் ஆகிய 3 பேரை கைது செய்தனர். அதேபோல், பைராஜ் கொடுத்த புகாரின்பேரில் சிக்க நரசப்பா, நரசராஜ், நரசப்பா ஆகிய 3பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

The post இருதரப்பு மோதலில் 3பேர் கைது appeared first on Dinakaran.

Related Stories: