லாரி, பொக்லைன் பறிமுதல்

தேன்கனிக்கோட்டை, மே 24: கிருஷ்ணகிரி மாவட்டம் தளி அருகே தளி கொத்தனுார் கிராமத்தில் அரசு புறம்போக்கு நிலத்தில் கிரானைட் கல் வெட்டி கடத்த முயற்சிப்பதாக வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன்பேரில், ஆர்ஐ சரவணன் உள்ளிட்டோர் அப்பகுதிக்கு விரைந்தனர். அதிகாரிகளை கண்டதும் அங்கிருந்த கும்பல், லாரி மற்றும் பொக்லைனை அப்படியே விட்டு விட்டு ஓட்டம் பிடித்தது. விசாரணையில், அங்கிருந்த மலையில் இருந்து சுமார் 11 அடி உயரம் மற்றும் 12 அடி சுற்றளவு கொண்ட கிரானைட் கல்லை வெட்டி எடுத்து லாரியில் கடத்த முயன்றது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, பொக்லைன் மற்றும் லாரியை பறிமுதல் செய்து, தளி போலீசில் ஒப்படைத்தனர். இதுகுறித்து போலீசார் வீசாரணை நடத்தி வருகின்றனர்.

The post லாரி, பொக்லைன் பறிமுதல் appeared first on Dinakaran.

Related Stories: