முத்துப்பேட்டையில் வீட்டுக்குள் புகுந்து அச்சுறுத்திய 5 அடி நீள நல்லபாம்பு சிக்கியது

 

முத்துப்பேட்டை, மே 24: முத்துப்பேட்டையில் வீட்டுக்குள் புகுந்து அச்சுறுத்திய 5 அடி நீள நல்லபாம்பு சிக்கியது. திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை பேட்டை சாலை திமிலத்தெரு முகமது மைதீன் மகன் முகமது யூசுப் என்வரது வீட்டிற்குள் நேற்று சுமார் 5அடி நீள நல்லப்பாம்பு ஒன்று உலவி வீட்டில் இருந்தவர்களை அச்சுறுத்தியது. இதனால் அதர்ச்சி அடைந்து முத்துப்பேட்டை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த நிலைய அலுவலர் (பொறுப்பு) முருகவேல் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் போராடி அந்த நல்லபாம்புவை சமார்த்தியமாக பாம்பு பிடிக்கும் கருவியை கொண்டு கவ்வி பிடித்து வெளியே கொண்டு வந்தனர். பின்னர் பிடித்த பாம்பை சாக்கு பையில் போட்டு எடுத்து சென்று தீயணைப்பு வீரர்கள் காட்டு பகுதியில் விட்டனர். இதனால் அந்த தெருவில் பரபரப்பு ஏற்பட்டது.

The post முத்துப்பேட்டையில் வீட்டுக்குள் புகுந்து அச்சுறுத்திய 5 அடி நீள நல்லபாம்பு சிக்கியது appeared first on Dinakaran.

Related Stories: