சனிதோறும் படியுங்கள் திராவிட மாடல் அரசின் 2 ஆண்டு சாதனை விளக்க தெருமுனை கூட்டம்

 

பாடாலூர், மே 24: ஆலத்தூர் தாலுகா கொட்டரை கிராமத்தில் திராவிட மாடல் அரசின் இரண்டு ஆண்டுகளின் சாதனை விளக்க தெருமுனை கூட்டம் ஆலத்தூர் கிழக்கு ஒன்றிய செயலாளரும், ஆலத்தூர் ஒன்றிய தலைவருமான என்.கிருஷ்ணமூர்த்தி நடைபெற்றது. தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆணைக்கிணங்க, பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா கிழக்கு ஒன்றிய இளைஞரணி சார்பில் கொட்டரை கிராமத்தில் திராவிட மாடல் அரசின் இரண்டு ஆண்டுகளின் சாதனை விளக்க தெருமுனை கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்திற்கு, ஆலத்தூர் கிழக்கு ஒன்றிய செயலாளரும், ஆலத்தூர் ஒன்றிய பெருந்தலைவருமான என்.கிருஷ்ணமூர்த்தி தலைமை வகித்தார். மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் ஹரிபாஸ்கர் முன்னிலை வகித்தார். தலைமை கழக பேச்சாளர் சிங்கை பிரபாகரன் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு கடந்த இரண்டு ஆண்டுகளில் தமிழ்நாடு முதலமைச்சரின் சீரிய பணிகள் குறித்தும், திராவிட மாடல் அரசின் சாதனைகள் குறித்தும் விளக்கி பேசினர். தெருமுனை கூட்டத்தில் கட்சியின் மாவட்ட, ஒன்றிய, நகர, நிர்வாகிகள், உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள், தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர். முன்னதாக, மாவட்ட பிரதிநிதி இளவரசு வரவேற்றார். நிறைவாக, ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் சுப்ரமணியன் நன்றி கூறினார்.

The post சனிதோறும் படியுங்கள் திராவிட மாடல் அரசின் 2 ஆண்டு சாதனை விளக்க தெருமுனை கூட்டம் appeared first on Dinakaran.

Related Stories: