உடையார்பாளையம் அருகே குடும்ப தகராறில் ஒருவர் சாவு

 

ஜெயங்கொண்டம், மே 23: அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருகே உள்ள வடகடல் காலனி தெருவை சேர்ந்த சாமிநாதன் மகன் சிற்றரசன் (45). கூலித்தொழிலாளி. இவரது மனைவி செல்வராணி. இவர்களுக்கு திருமணம் நடந்து 2 மகன்கள் 1 மகள் உள்ளனர். இந்நிலையில் கடந்த 19ம் தேதி புதுப்பாளையம் கிராமத்திற்கு துக்க நிகழ்ச்சிக்கு குடும்பத்துடன் சிற்றரசன் சென்றுள்ளார். அங்கு சிற்றரசனுக்கும், செல்வராணிக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் சிற்றரசன் மட்டும் வடகடல் கிராமத்தில் உள்ள வீட்டிற்கு வந்து, அங்கிருந்த பூச்சி மருந்தை எடுத்து குடித்து மயங்கி உள்ளார்.

இதையடுத்து சிற்றரசனை அக்கம் பக்கத்தினர் மீட்டு, ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். பின்னர் அரியலூர் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் மேல்சிகிச்சை பெற்று வந்த சிற்றரசன் சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார். இதுகுறித்து உடையார்பாளையம் காவல் நிலையத்தில் சிற்றரசன் தந்தை சாமிநாதன் கொடுத்த புகாரின் பேரில் எஸ்ஐ திருவேங்கடம் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

The post உடையார்பாளையம் அருகே குடும்ப தகராறில் ஒருவர் சாவு appeared first on Dinakaran.

Related Stories: