குத்தாலம் அருகே சாலை சீரமைக்க கோரிக்கை

 

குத்தாலம், மே 24: மயிலாடுதுறை மாவட்டம்,குத்தாலம் ஒன்றியம், பெருமாள் கோவில் ஊராட்சி தென்பாதியிலிருந்து, தேரழுந்தூர் ஊராட்சி மாட்டாங்கரைக்கு செல்லும் சாலை மிகவும் பழுதடைந்து, ஜல்லிகற்கள் பெயர்ந்து மக்கள் நடந்துகூட செல்ல முடியாத அளவில் சிதிலமடைந்து காட்சியளிக்கிறது. தேரழுந்தூர், செங்குடி, கோட்டகம் ஆகிய ஊர்களிலிருந்து மாட்டாங்கரை செல்வதற்கு இந்த சாலை பிரதான சாலையாகும். இந்த சாலையின் வழியாக ஒரு நாளைக்கு 1000க்கும் மேற்பட்டவர்கள் சென்று வருகின்றனர்.

எனவே வாகன ஓட்டிகளுக்கும், பொதுமக்களுக்கும் பயனளிக்கும் வகையில் துறை சார்ந்த அதிகாரிகள் உடனே நடவடிக்கை எடுத்து ஜல்லிகற்கள் பெயர்ந்து, பொதுமக்கள் நடக்க முடியாத அளவில் உள்ள சாலையை உடனே புதிதாக அமைத்து தர வேண்டும் என இப்பகுதி மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். இதேபோல தேரழுந்தூர் கடை வீதியில் இருந்து மாட்டங்கரை செல்லும் சாலையும் மிகவும் பழுதடைந்து ஜல்லிகற்கள் பெயர்ந்து காணப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

The post குத்தாலம் அருகே சாலை சீரமைக்க கோரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: