மணப்பாறை பஸ்நிலையத்தில் வாகன சோதனையில் டூ வீலர் திருடன் கைது 20 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

 

மணப்பாறை, மே 23: மணப்பாறை பஸ்நிலைய பகுதியில் போலீசாரின் வாகன சோதனையில் இருசக்கர வாகன திருடனை போலீசார் கைது செய்து, 20 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர். திருச்சி மாவட்டம், மணப்பாறை பேருந்து நிலையம் பகுதிகளில் டிஎஸ்பி ராமநாதன் தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கரூர் மாவட்டம் குரும்பபட்டியைச் சேர்ந்த ஜெயபால் (29) என்பவரை பிடித்து விசாரணை செய்தனர். அவர் முன்னுக்குப் பின் முரணாக பதில் கூறியதால் காவல் நிலையம் அழைத்து விசாரணை மேற்கொண்டனர்.

இதில் பிடிபட்ட ஜெயபால் என்பவர் மணப்பாறை நகரப் பகுதிகளிலும், மார்க்கெட் மற்றும் பேருந்து நிலையம் ஆகிய பகுதிகளில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனங்களை திருடியதை ஒப்புக்கொண்டான். அவனிடமிருந்து 20 இருசக்கர வாகனங்கள் கைப்பற்றப்பட்டன. மேலும் ஜெயபாலை கைது செய்த போலீசார் வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

The post மணப்பாறை பஸ்நிலையத்தில் வாகன சோதனையில் டூ வீலர் திருடன் கைது 20 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் appeared first on Dinakaran.

Related Stories: