இதுகுறித்து ஆவடி காவல் துணை ஆணையர் புருஷோத்தமன் தலைமையிலான 5 பேர் கொண்ட தனிப்படையினர் கொள்ளையர்களை தீவிரமாக தேடினர். திருமுல்லைவாயில் காவல் ஆய்வாளர் ஜெயகிருஷ்ணன் தலைமையில் தனிப்படையினர் விரைந்து சென்றனர். அங்கு ஒருவாலிபரை மடக்கிப்பிடித்தனர். விசாரணையில் சென்னை புளியந்தோப்பு பகுதியை சேர்ந்த பாலா(24) கடந்த 10ம் தேதி முருகத்தாயின் வீட்டில் நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்துக்கொண்டு ஊத்துக்கோட்டை பகுதியில் உள்ள தனது கள்ளக்காதலி வீட்டுக்கு சென்றுள்ளார். கள்ளக்காதலியிடம் ரூ.50 ஆயிரம் கொடுத்துள்ளார். அங்கு 5 நாட்கள் உல்லாசமாக இருந்துள்ளார். அதன் பிறகு, நகைகளை விற்பதற்காக சவுகார்பேட்டைக்கு வந்தபோது பிடிபட்டது தெரியவந்தது. போலீசார் பாலாவிடம் இருந்து 42 சவரன் தங்க நகைகள் ரூ.50,000 பறிமுதல் செய்தனர். போலீசார் பாலாவை அம்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.
The post ஆவடி அருகே செவியிலர் வீட்டில் திருடிய பணத்தில் கள்ளக்காதலியுடன் உல்லாசம்: கொள்ளையன் கைது appeared first on Dinakaran.