பெரம்பலூர் நகர வர்த்தக சங்க தலைவர் படத்திறப்பு

 

பெரம்பலூர்,மே22: பெரம்பலூர் நகர வர்த்தகர் சங்கத்தின் தலைவரும், பெரிய கடைவீதியில் உள்ள ராஜா ஸ்டோர் மற்றும் ரா ஜா ரெடிமேட்ஸ் நிறுவனரு மான திருப்பணிச் செம்மல் பழனியாண்டிப் பிள்ளை திரு உருவப் படத் திறப்பு விழா நேற்று பெரம்பலூர் துறையூர் சாலையில் உள்ள முத்துகிருஷ்ணா மக்கள் மன்றத்தில் நடை பெற்றது.விழாவில் திருச்சி சிவானி கல்லூரி நிறுவனர் செல்வராஜ், ராமராஜ் காட்டன் உரிமையாளர் ஏ.பி.நாகராஜன், திருச்சி மங்கள் & மங்கள் உரிமையாளர் முக்கப் பிள்ளை, பெரம்ப லூர் தந்தை ஹேன்ஸ் ரோ வர் கல்விநிறுவனங்களின் தாளாளர் வரதராஜன்,  ராமகிருஷ்ணா கல்வி நிறு வன குழுமத் தலைவர் சிவசுப்பிரமணியம், ராஜா ஸ்டோர் உரிமையாளர் மாரிமுத்து, மகேஸ்வரன் அரிமா சாசனச் தலைவர் ராஜாராம், முன்னாள் அறங் காவலர் வைத்தீஸ்வரன், சுலோச்சனா, நடராஜன், பழனியப்பன் மற்றும் திர ளான பொதுமக்கள் கலந்து கொண்டு பழனியாண்டிப் பிள்ளை உருவப் படத்திற்கு மலர்கள் தூவி, அவரைப் பற்றி நினைவு கூர்ந்து புகழ் அஞ்சலி செலுத்தினர்.

The post பெரம்பலூர் நகர வர்த்தக சங்க தலைவர் படத்திறப்பு appeared first on Dinakaran.

Related Stories: