வெறிச்சோடிய காளைமாடு சிலை ரவுண்டானா சாராய ஊறல் வைத்திருந்தவர் கைது

 

ஈரோடு, மே 22: மாவட்டம் முழுவதும் கள்ளச்சாராய தடுப்பு வேட்டையில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி, ஈரோடு மாவட்டம், நம்பியூர் தாலுகா, ராயர்பாளையம், சாலைக்காடு பகுதியில், வரப்பாளையம் போலீசார் நேற்று முன் தினம் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அதேபகுதியைச் சேர்ந்த தம்பி (எ) கருப்புசாமி (39) என்பவர், தனது வீட்டின் பின்புறத்தில், சுமார் 15 லிட்டர் சாராய ஊறலை பிளாஸ்டிக் குடத்தில் வைத்திருந்ததை கண்டுபிடித்தனர்.இதையடுத்து, போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

The post வெறிச்சோடிய காளைமாடு சிலை ரவுண்டானா சாராய ஊறல் வைத்திருந்தவர் கைது appeared first on Dinakaran.

Related Stories: