இளம் பெண்ணை கிண்டல் செய்த 2 வாலிபர்கள் கைது

திருத்தணி, மே 21: திருத்தணி அருகே உள்ள கிராமத்தில் இளம்பெண்ணை கேலி, கிண்டல் செய்த 2 வாலிபர்கள் இருவரை போலீசார் கைது செய்தனர். திருத்தணி அடுத்த சிறுகுமி காலனியை சேர்ந்தவர் பொன்னுரங்கம். இவரது மகள் ஐஸ்வர்யா(23). தனியார் கம்பெனியில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில், நேற்றுமுன்தினம் பணி முடிந்ததும் ஊருக்கு வந்தார். பின்னர், பஸ் ஸ்டாப்பில் இருந்து வீட்டுக்கு நடந்து செல்லும்போது, மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்த பாபு(21), விஜயகுமார்(25) ஆகியோர் ஐஸ்வர்யாவை வழி மறித்தனர். இதனை தொடர்ந்து, கேலி, கிண்டல் செய்ததுடன் தகாத வார்த்தைகளால் பேசியுள்ளனர். இதனால் கடும் வேதனை அடைந்த இளம்பெண், தனது பெற்றோரிடம் வந்து நடந்தது பற்றி தெரிவித்துள்ளார். இதுபற்றி இளம்பெண்ணின் பெற்றோர் கொடுத்த புகாரின்படி, திருத்தணி போலீசார் வழக்குபதிவு செய்து பாபு, விஜயகுமார் ஆகியோரிடம் விசாரணை நடத்தினர். பின்னர், இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

The post இளம் பெண்ணை கிண்டல் செய்த 2 வாலிபர்கள் கைது appeared first on Dinakaran.

Related Stories: