கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி

 

சேலம், மே 20: சேலத்தில் மாநில சிறுபான்மையினர் ஆணையம் சார்பில் நடந்த கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டியில், 500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். மாநில சிறுபான்மையினர் ஆணையம் சார்பில், கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டிகள் நேற்று சேலம் சோனா கல்லூரியில் நடந்தது. கல்லூரி தலைவர் வள்ளியப்பா தலைமை வகித்தார். மாநில ஒருங்கிணைப்பாளர் நெடுஞ்செழியன் முன்னிலை வகித்தார். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ராம.சுகந்தன் வரவேற்றார். இதில், மாவட்டம் முழுவதிலும் உள்ள பல்வேறு அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் கல்லூரிகளைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தலா 5 தலைப்புகள், தனித்தனியாக வழங்கப்பட்டு போட்டிகள் நடந்தன. ஆர்வமுடன் கலந்து கொண்ட மாணவர்கள் தங்களது திறனை வெளிப்படுத்தினர். இதில் முதல் 3 இடங்களை பிடிக்கும் மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு, மாநில அளவிலான போட்டியில் பங்கேற்கின்றனர். இந்நிகழ்ச்சியில், துணை மேயர் சாரதா தேவி, டாக்டர் தருண், சோனா கல்லூரி முதல்வர் செந்தில்குமார், தியாகராஜர் பாலிடெக்னிக் முதல்வர் கார்த்திகேயன், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சுந்தரம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

The post கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி appeared first on Dinakaran.

Related Stories: