தேர்வெழுதிய 19 கைதிகளும் பத்தாம் வகுப்பில் தேர்ச்சி

 

சேலம், மே.20: தமிழ்நாட்டில் 10ம்வகுப்பு தேர்வு முடிவுகள் நேற்று வெளியானது. இத்தேர்வை சேலம் மத்திய சிறையில் உள்ள தண்டனை மற்றும் விசாரணை கைதிகளில் 19 பேர் எழுதினர். இதில் தேர்வெழுதிய அனைவரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். இவர்களில் பிரதாப் என்ற கைதி 280 மதிப்பெண்கள் பெற்று முதலிடத்தை பிடித்துள்ளார். தேர்ச்சி பெற்ற கைதிகளை மத்திய சிறை கண்காணிப்பாளர் தமிழ்செல்வன் மற்றும் அதிகாரிகள் பாராட்டினர்.

The post தேர்வெழுதிய 19 கைதிகளும் பத்தாம் வகுப்பில் தேர்ச்சி appeared first on Dinakaran.

Related Stories: