வாலிபர் மாயம்

 

கிருஷ்ணகிரி, மே 20: கிருஷ்ணகிரி ராசுவீதி துலுக்கானி மாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த தங்கராஜ் மகன் ஜெயராஜ்(19). பிளஸ் 2 முடித்து விட்டு வீட்டில் இருந்து வந்தார். கடந்த 28ம்தேதி காலை, வீட்டில் இருந்து வெளியே சென்றவர், மீண்டும் வீடு திரும்பவில்லை. உறவினர்கள், நண்பர்கள் வீடுகளில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து தங்கராஜ், டவுன் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post வாலிபர் மாயம் appeared first on Dinakaran.

Related Stories: