தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி இதை உறுதி செய்தார். சென்னை வரும் ராகுல்காந்தி இரவு தங்கி மறுநாள் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. நாளை காலை 8 மணி அளவில் ஸ்ரீபெரும்புதூர் ராஜிவ்காந்தி நினைவிடத்துக்கு சென்று அங்கு மறைந்த முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தியின் 32ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு ராகுல்காந்தி அஞ்சலி செலுத்துவதற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் செய்யப்பட்டது. இந்நிலையில், அவரது வருகை உறுதி செய்யப்படவில்லை என்று தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் மூத்த நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். அவரது சென்னை வருகை ரத்து செய்யப்பட்டு விட்டதாகவும் கூறினர்.
The post ராகுல்காந்தியின் சென்னை வருகை திடீர் ரத்து appeared first on Dinakaran.