நாளை மின் தடை

 

ஈரோடு,மே19: ஈரோடு துணை மின் நிலையத்திலிருந்து செல்லும் திருநகர் காலனி மின் பாதையில் பாதாள சாக்கடை திட்டப்பணிகள் நாளை(20ம் தேதி) மேற்கொள்ளப்பட உள்ளது. இதனால், வி.சி.டி.வி. சாலை, ஸ்வஸ்திக் கார்னர், திருநகர் காலனி, வ.உ.சி. பார்க் முதல் காய்கறி மார்க்கெட் வரை, அண்ணாமலை லே-அவுட், பஸ் ஸ்டாண்ட் முதல் நல்லி மருத்துவமனை சாலை ஆகிய பகுதிகளில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என ஈரோடு நகரியம் மின் விநியோக செயற்பொறியாளர் சாந்தி தெரிவித்துள்ளார்.

The post நாளை மின் தடை appeared first on Dinakaran.

Related Stories: