கொள்ளிடம் ஆற்றில் மணல் குவாரி அமைக்கப்படவில்லை: ஐகோர்ட் கிளையில் தமிழ்நாடு அரசு பதில்

மதுரை: கொள்ளிடம் ஆற்றில் மணல் குவாரி அமைக்கப்படவில்லை, குடிநீர் குழாய் அமைக்கும் பணிகள் மட்டுமே நடைபெறுகிறது என உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தமிழ்நாடு அரசு பதில் கூறியுள்ளது. அரசு தெரிவித்த பதிலை தீர்மான பத்திரமாக தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். கல்லணை அருகே 25 இடங்களில் மணல் குவாரி அமைப்பதறகான நடவடிக்கையில் அரசு ஈடுபட்டு வருவதாகவும், குவாரி அமைக்கப்பட்டால் மிகவும் பழமையான கல்லணை பாதிக்கப்படும் எனவும் உயநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

The post கொள்ளிடம் ஆற்றில் மணல் குவாரி அமைக்கப்படவில்லை: ஐகோர்ட் கிளையில் தமிழ்நாடு அரசு பதில் appeared first on Dinakaran.

Related Stories: