இது தொடர்பாக ட்விட்டரில் செய்தி வெளியிட்டுள்ள தமிழக மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி,
“சென்னையின் நேற்றைய 17/05/2023 மின் தேவை 4044 மெகாவாட் ஆகும். இந்த தேவை எந்த மின் தடையுமின்றி ஈடு செய்யப்பட்டது.
இதற்கு முந்தைய உட்சபட்ச தேவை 16/05/2023ல் 4016 MW ஆகும்.
நேற்று சென்னையில் மின் நுகர்வு 9.03 கோடி யூனிட்கள் பயன்படுத்தப்பட்டது. இதற்கு முன் 16/05/2023 அன்று 9.02 கோடி யூனிட்கள் பயன்படுத்தப்பட்டிருந்தது.
அதுவே கடந்த 5 ஆண்டு கால அதிமுக ஆட்சியில், சென்னையின் அதிகபட்ச மின் தேவை 18/06/2019 அன்று 3738 MW மட்டுமே.
அதிமுக ஆட்சியில், உட்சபட்சமாக வெறும் 6.64 கோடி யூனிட்களே 17/06/2019 அன்று பயன்படுத்தப்பட்டிருந்தது.”
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டது.
The post சென்னையில் ஒரே நாளில் அதிகபட்சமாக 4,044 மெகாவாட் மின்சாரம் நுகர்வு ; அமைச்சர் செந்தில் பாலாஜி தகவல்!! appeared first on Dinakaran.