தமிழ்நாடு அரசு அலுவலர்கள், ஆசிரியர்களுக்கு 4% அகவிலைப்படி உயர்வு: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: தமிழ்நாடு அரசு அலுவலர்கள், ஆசிரியர்களுக்கு அகவிலைப்படியை 4% உயர்த்தி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். 38 சதவீதமாக உள்ள அகவிலைப்படி ஏப்ரல் 1 முதல் 42 சதவீதமாக உயர்த்தி வழங்கப்படும். அகவிலைப்படி உயர்வு மூலம் 16 லட்சம் அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் பயனடைவர். அகவிலைப்படி உயர்வால் அரசுக்கு ஆண்டு ஒன்றுக்கு ரூ.2,367 கோடி கூடுதல் செலவினம் ஏற்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

The post தமிழ்நாடு அரசு அலுவலர்கள், ஆசிரியர்களுக்கு 4% அகவிலைப்படி உயர்வு: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: