அவர்களை உறவினர்கள் மீட்டு, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சங்கர், சுரேஷ் ஆகியோர் அடுத்தடுத்து பரிதாபமாக உயிரிழந்தனர். தொடர்ந்து தரணிவேல், ராஜமூர்த்தி, மண்ணாங்கட்டி ஆகியோர் நேற்று இறந்தனர். ஒருவர் நிலை கவலைக்கிடமாக உள்ளது. அதே பகுதியை சேர்ந்த 13 பேர் விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் மலர்விழி (60)என்ற பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அதே போல், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த விஜயன் என்பவர் உயிரிழந்தார். இதனால் பலி எண்ணிக்கை 7 ஆக உயர்ந்தது.
இதற்கிடையில் மரக்காணம் போலீசார், சாராய வியாபாரி அமரனை கைது செய்தனர். அவரோடு கூட்டு சேர்ந்து தொழில் செய்து முத்து (31), ஆறுமுகம் (42), மண்ணாங்கட்டி (50), ரவி (50) ஆகியோரை தேடி வருகின்றனர். மேலும் மரக்காணம் அருகே கள்ளச்சாராயம் குடித்த பெண் உட்பட 6 பேர் உயிரிழந்து உள்ளனர். பலியானவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரண நிதி வழங்கவும், 2 இன்ஸ்பெக்டர் மற்றும் 2 உதவி ஆய்வாளர்களை சஸ்பெண்ட் செய்தும் முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
The post விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் கள்ளச்சாராயம் குடித்து பலியானோர் எண்ணிக்கை 7 ஆக அதிகரிப்பு!! appeared first on Dinakaran.