இதற்காக ஓவியர் வெற்றிவேலை விசாரணைக்கு அழைத்த மகளிர் போலீஸ் சிறப்பு எஸ்ஐ பரமேஸ்வரி, கைது செய்யாமல் இருக்க ரூ.3 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார். புகாரின்பேரில், திருவண்ணாமலை லஞ்ச ஒழிப்பு போலீசார் தந்த ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுக்களை நேற்று சிறப்பு எஸ்ஐ பரமேஸ்வரியிடம் ஓவியர் வெற்றிவேல் கொடுத்தார். அப்போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் அவரை கைது செய்து 3 மணி நேரம் விசாரணை நடத்தினர். பின்னர் திருவண்ணாமலை மாஜிஸ்திரேட் முன் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
The post அடித்து துன்புறுத்துவதாக மனைவி புகார்: கணவனிடம் ரூ.3,000 லஞ்சம் வாங்கிய பெண் எஸ்ஐ கைது appeared first on Dinakaran.