ஏர் இந்தியா விமானிக்கு 3 மாதம் தடை

புதுடெல்லி: பிப்ரவரி மாதம் 27ம் தேதி துபாயில் இருந்து டெல்லிக்கு ஏர் இந்தியா விமானம் வந்தது. இந்த விமானத்தின் கட்டுப்பாட்டு அறைக்குள் அந்த விமானத்தில் பயணித்த தனது தோழியை விமானி அனுமதித்துள்ளார். இந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியது. இது தொடர்பாக விளக்கம் கேட்டு விமான நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

இந்நிலையில் விமான கட்டுப்பாட்டு அறைக்குள் பெண் பயணியை அனுமதித்ததற்காக ஏர் இந்தியா நிறுவனத்துக்கு ரூ.30லட்சம் அபராதம் விதித்து விமான போக்குவரத்து துறை இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது. மேலும் விமானத்தை இயக்கிய விமானியின் உரிமத்தை 3 மாதங்களுக்கு சஸ்பெண்ட் செய்தும் உத்தரவிடப்பட்டுள்ளது.

The post ஏர் இந்தியா விமானிக்கு 3 மாதம் தடை appeared first on Dinakaran.

Related Stories: