வெம்பக்கோட்டை அருகே வீட்டில் பதுக்கிய 160 கிலோ வெடி பொருட்கள் பறிமுதல் 3 பேர் மீது வழக்கு

ஏழாயிரம்பண்ணை, மே 12: வெம்பக்கோட்டை அருகே வீட்டில் பதுக்கி வைத்திருந்த 160 கிலோ வெடி பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. வெம்பக்கோட்டை அருகே தாயில்பட்டி, விஜயகரிசல்குளம் உள்ளிட்ட பகுதியில் சட்டவிரோதமாக வீட்டில் பட்டாசு தயாரிப்பதாக வெம்பக்கோட்டை காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் சார்பு ஆய்வாளர்கள் வெற்றி முருகன், ராமமூர்த்தி ஆகியோர் தலைமையில் காவல் துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது தாயில்பட்டி டி.ராமலிங்காபுரம் பகுதியைச் சேர்ந்த அன்புக்கரசன்(52), ராமமூர்த்தி(44), பாண்டியராஜ் (51) ஆகியோர் வீட்டில் அரசு அனுமதி இல்லாமல், எளிதில் தீப்பற்றக்கூடிய மருந்து செலுத்திய வெள்ளை திரிகள், சுமார் 160 கிலோ எடை கொண்ட வெடிகள் வைத்திருந்தது தெரியவந்தது. அவர்களிடம் இருந்து வெடி மற்றும் மருந்து பொருட்களை பறிமுதல் செய்த போலீசார் 3 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post வெம்பக்கோட்டை அருகே வீட்டில் பதுக்கிய 160 கிலோ வெடி பொருட்கள் பறிமுதல் 3 பேர் மீது வழக்கு appeared first on Dinakaran.

Related Stories: