அங்கன்வாடிக்கு வரும் 3 முதல் 6 வயது குழந்தைகளுக்கு கல்வி கற்பிப்பிதற்கான பயிற்சி தொடர்பாக பணிக்குழு அமைக்கப்பட்டது. அந்த குழு தனது அறிக்கையில், 3 நாள் நேரடி பயிற்சி, அதைத் தொடர்ந்து புதுப்பித்தல் பயிற்சி, புத்தகங்கள் மற்றும் பொம்மைகள் உட்பட கற்பித்தல் பொருட்களை பயன்படுத்துதல், பொம்மைகளை உருவாக்க கற்றுக் கொள்ள பட்டறை ஆகியவை வழங்க பரிந்துரை செய்துள்ளது. இதன்படி அங்கன்வாடி பணியாளர்களுக்கு பயிற்சிகள் வழங்கப்படும். இதில் பெற்றோரும் பங்களித்து வருகின்றனர்’’ என்றார்.
The post கல்வி மையங்களாக மாறும் அங்கன்வாடிகள்: ஒன்றிய அமைச்சர் பேச்சு appeared first on Dinakaran.