இதனால் உலகின் 3ம் நிலை பணக்காரராக இருந்த அதானி 25வது இடத்திற்கும் கீழே சென்றார். இது குறித்து விசாரிக்குமாறு தொடரப்பட்ட பொது நல வழக்கை தொடர்ந்து 6 பேர் கொண்ட நிபுணர் குழுவை மார்ச் மாதம் உச்சநீதிமன்றம் அமைத்தது. 2மாதங்களில் அறிக்கை அளிக்கவும் நீதிமன்றம் ஆணையிட்டிருந்தது. அதானி குழுமத்தில் முறைகேடு நடந்திருந்தால் முதலீட்டாளர்களை எவ்வாறு பாதுகாப்பது, முறைகேட்டால் ஏற்படும் தாக்கங்களை மதிப்பிடவும் நீதிபதிகள் தெரிவித்திருந்தனர். இந்த நிலையில், விசாரணையை நிறைவு செய்த நிபுணர் குழு நேற்று முன்தினம் சீலிட்ட உரையில் விசாரணை அறிக்கையை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தது.அதானி குழும முறைகேடு தொடர்பான வழக்கு விசாரணை நாளை மறுநாள் நீதிமன்றத்தில் நடைபெற உள்ளது. மறுபுறத்தில் நீதிமன்ற ஆணைக்கு இணங்க இந்திய பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியமான செபியும் விசாரணை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.
The post அதானி குழும முறைகேடு வழக்கில், 6 பேர் கொண்ட நிபுணர் குழு உச்சநீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல்!! appeared first on Dinakaran.