பெண்ணை மிரட்டிய வாலிபர் கைது

 

சாத்தூர், மே 10: சாத்தூர் அருகே பெண்ணுக்கு கொலைமிரட்டல் விடுத்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். சாத்தூர் அருகே தென்றல் நகரை சேர்ந்தவர் பாண்டீஸ்வரி(23). இவருக்கு திருமணம் முடிந்து ஈரோட்டில் தனது கணவருடன் வசித்து வருகிறார். தற்போது பள்ளிகளுக்கு கோடை விடுமுறையாக உள்ளதால் சாத்தூரில் உள்ள பெற்றோர் வீட்டிற்கு குழந்தையுடன் வந்துள்ளார்.

இவர் நேற்று வீட்டின் அருகில் இருக்கும் கடையில் பொருட்கள் வாங்க சென்றுள்ளார். அங்கு நின்றிருந்த கணேஷ்ராம் என்ற கணேசன்(35), அவதூறாக பேசி கொலைமிரட்டல் விடுத்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக பாண்டீஸ்வரி கொடுத்த புகாரில் சாத்தூர் நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து கணேஷ்ராம் என்ற கணேசனை கைது செய்தனர்.

The post பெண்ணை மிரட்டிய வாலிபர் கைது appeared first on Dinakaran.

Related Stories: