அண்ணா தொழிற்சங்க பேரவையின் 314 நலிந்த தொழிலாளர்களுக்கு தலா ரூ.1 லட்சம் நிதி

சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: அதிமுக அண்ணா தொழிற்சங்க பேரவையின் நலிந்த தொழிலாளர்களுக்கு குடும்ப நல நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டையும், இந்த ஆண்டையும் சேர்த்து, அதிமுக அமைப்பு ரீதியாக செயல்பட்டு வரும் மாவட்டங்களில் இருந்தும், புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திரா, கேரளா ஆகிய பிற மாநிலங்களில் இருந்தும், போக்குவரத்து கழக அண்ணா தொழிற்சங்கங்களில் இருந்தும், தேர்ந்தெடுக்கப்பட்ட 314 நலிந்த தொழிலாளர்களுக்கு தலா ரூ.1 லட்சம் வீதம் மொத்தம் ரூ. 3 கோடியே 14 லட்சம் குடும்ப நல நிதியுதவி வழங்கப்படும். இவர்களுக்கான நிதியுதவி வருகிற 17ம் தேதி (புதன்) காலை 10 மணிக்கு சென்னை, ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் வழங்கப்படும்.

The post அண்ணா தொழிற்சங்க பேரவையின் 314 நலிந்த தொழிலாளர்களுக்கு தலா ரூ.1 லட்சம் நிதி appeared first on Dinakaran.

Related Stories: