பெண் நக்சல் உட்பட 2 பேர் என்கவுன்டரில் பலி

சுக்மா: சட்டீஸ்கர் மாநிலத்தின் சுக்மா மாவட்டத்தில் நக்சல்கள் பதுங்கி இருப்பது குறித்து போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து மாவட்ட ரிசர்வ் போலீசார் மற்றும் தீவிரவாத தடுப்பு பிரிவு போலீசார் இணைந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். தண்டேஸ்புரம் கிராமம் அருகே உள்ள காட்டுப்பகுதியில் அதிகாலை 5.30 மணிக்கு நக்சல்கள் திடீரென போலீசார் மீது துப்பாக்கி சூடு நடத்தினார்கள். இதனை தொடர்ந்து போலீசார் நடத்திய பதிலடியில் பெண் நக்சல் உட்பட 2 நக்சல்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர். கொல்லப்பட்ட 2 நக்சல்களின் தலைக்கும் ரூ.11 லட்சம் சன்மானம் அறிவிக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

The post பெண் நக்சல் உட்பட 2 பேர் என்கவுன்டரில் பலி appeared first on Dinakaran.

Related Stories: