உயிருக்கு ஆபத்தான நிலையில் மயங்கி கிடந்த அவர்களை அக்கம்பக்கத்தினர் மீட்டு, அங்குள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு இருவருக்கும் முதலுதவி சிகிச்சை அளித்து, மேல்சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு இருவரையும் பரிசோதித்தபோது, வரும் வழியிலேயே லட்சுமணன் இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். படுகாயம் அடைந்த இளங்கோவன், ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
இப்புகாரின்பேரில், சோழவரம் போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து, மர்ம கும்பல் குறித்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர். முதல் கட்ட விசாரணையில், நெடுவரம்பாக்கத்தில் கடந்த ஜனவரி மாதம் அம்பேத்கர் சிலை சேதப்படுத்தப்பட்டது. இவ்வழக்கு தொடர்பாக சம்பந்தப்பட்ட நபர்களுக்கு எதிராக இளங்கோவனும் அவரது அண்ணனும் சாட்சியம் அளித்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த எதிர் தரப்பினர், அண்ணன்-தம்பியை கத்தியால் சரமாரி வெட்டியதில், லட்சுமணன் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். இக்கொலை வழக்கு தொடர்பாக போலீசார், முன் விரோதம் காரணமாக இவர்கள் தாக்கப்பட்டனரா? இல்லை வேறு காரணமா? என பல்வேறு கோணங்களில் விசாரிக்கின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
The post அம்பேத்கர் சிலை சேதப்படுத்தப்பட்ட வழக்கில் சாட்சி கூறிய அண்ணன் வெட்டி படுகொலை தம்பி கவலைக்கிடம்: மர்ம கும்பலுக்கு வலை appeared first on Dinakaran.