உள்ளாடையை கழற்றி சில்மிஷம் காங்கிரஸ் பிரமுகரை சிறைபிடித்த பெண்கள்

மார்த்தாண்டம்: கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே நந்தங்காடு பகுதியை சேர்ந்தவர் ராஜன் சேவியர் (52). நந்தங்காடு காங்கிரஸ் கிளை செயலாளராக உள்ளார். இவரது மனைவி வெளிநாட்டில் வேலை செய்வதால் தனிமையில் உள்ளார். தினமும் மது அருந்திவிட்டு வீட்டிற்கு செல்லும் வழியில் நடந்து செல்லும் பெண்களை வம்புக்கு இழுப்பதாக கூறப்படுகிறது. நேற்று முன்தினம் மாலை போதையில் வீட்டிற்கு வந்த ராஜன் சேவியர் வாசலில் அமர்ந்துகொண்டு வெளியில் நின்ற பெண்களிடம் ஆபாசமாக பேசியுள்ளார். பின்னர் திடீரென்று தனது உள்ளாடைகளை கழற்றிவிட்டு ஆபாச செய்கைகளை செய்துள்ளார். பெண்களின் அருகே சென்று சில்மிஷம் செய்ததாகவும் கூறப்படுகிறது. அவர்கள் கூச்சல் போடவே அக்கம்பக்கத்தில் இருந்த மற்ற பெண்களும் திரண்டு வந்து அவரை சிறைப்பிடித்தனர்.போலீசார் வந்து அவரை கைது செய்து அழைத்து சென்றனர்.

The post உள்ளாடையை கழற்றி சில்மிஷம் காங்கிரஸ் பிரமுகரை சிறைபிடித்த பெண்கள் appeared first on Dinakaran.

Related Stories: