மத்தியபிரதேசம் மொரேனா மாவட்டம் லேபா கிராமத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பெண்கள் உட்பட 6 பேர் சுட்டுக்கொலை: போலீசார் விசாரணை

மத்தியபிரதேசம்: மத்தியபிரதேசம் மொரேனா மாவட்டம் லேபா கிராமத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேரை சுட்டுக்கொன்றுள்ளனர். சுட்டுக்கொல்லப்பட்டவர்களில் 3 பேர் பெண்கள் என்று தெரிய வந்துள்ளது. நிலத்தகராறில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் சுட்டுக்கொல்லப்பட்டது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். துப்பாக்கி சூட்டில் படுகாயம் அடைந்த மேலும் இருவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். தரிசு நிலத்தில் கழிவு கொட்டுவதில் இரு குடும்பத்தினர் இடையே ஏற்பட்ட முன்விரோதத்தில் துப்பாக்கிச்சூடு நடந்துள்ளது.

இன்று காலை ஏற்பட்ட சம்பவத்தில் இரு குடும்பங்களை சேர்ந்தவர்கள் ஒருவரை ஒருவர் தடியால் தாக்கி கொண்டுள்ளனர். இதன் எதிரொலியாக ஒரு குடும்பத்தினர் வைத்திருந்த துப்பாக்கிகளை கொண்டு மற்றொரு குடும்பத்தினரை பல முறை துப்பாக்கியால் சுட்டனர். இந்த துப்பாக்கி சூட்டில் 3 பெண்கள் உட்பட 6 பேர் உயிரிழந்தனர்.

இந்த துப்பாக்கிசூட்டினால் அந்த கிராமத்தில் முழுமையாக தடை போடட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது. தொடர்ந்து இந்தச்சம்பவம் தொடர்பான காரணங்களை திரட்டி வருகின்றனர். ஏற்கனவே 10 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த துப்பாக்கிசூட்டில் உயிரிழந்தவர்கள் இதே குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்றும் தகவல் தெரிவித்துள்ளனர். பலமுறை இதுபோல கிராமங்களில் துப்பாக்கிசூடு நடந்துள்ளது என்றும் கூறியுள்ளனர். ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் சுட்டுக்கொல்லப்பட்டது மத்தியபிரேதச மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

The post மத்தியபிரதேசம் மொரேனா மாவட்டம் லேபா கிராமத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பெண்கள் உட்பட 6 பேர் சுட்டுக்கொலை: போலீசார் விசாரணை appeared first on Dinakaran.

Related Stories: