பாகம்பிரியாள் கோயிலில்தீர்த்தவாரி

 

திருவாடானை, மே 5: திருவாடானை அருகே திருவெற்றியூரில் பிரசித்தி பெற்ற பாகம்பிரியாள் அம்மன் கோயில், சித்திரை திருவிழா கடந்த 25ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. விழா நடைபெறும் ஒவ்வொரு நாளும் பல்வேறு வாகனங்களில் சுவாமி, அம்மன் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். அதனைத் தொடர்ந்து விழாவின் முக்கிய நிகழ்வாக 3ம் தேதி தேரோட்டம் நடைபெற்றது. 10ம் திருவிழாவை முன்னிட்டு நேற்று காலை 9 மணிக்கு பாகம்பிரியாள் வல்மீகநாதர் பிரியா விடையுடன் தீர்த்தவாரியுடன் விழா நிறைவு பெற்றது. இந்நிகழ்ச்சியில் பெண்கள் கலந்து கொண்டனர்.

The post பாகம்பிரியாள் கோயிலில்தீர்த்தவாரி appeared first on Dinakaran.

Related Stories: