விண்ணை பிளந்த சிவ கோஷங்கள்: சித்திரை தேரோடும் மதுரையிலே… பக்தர்கள் பரவசம்..!!

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் வெகு விமரிசையாக நடந்தது. மீனாட்சி அம்மன் சிறிய தேரிலும், பெரிய தேரில் சுந்தரேஸ்வரர் – பிரியாவிடை அம்மனும் நான்கு மாசி வீதிகளிலும் வலம் வந்தனர். லட்சக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுந்தனர். கீழ மாசி வீதியில் துவங்கும் தேரோட்ட நிகழ்வானது தெற்கு மாசி வதி, மேல மாசி வீதி, வடக்கு மாசி வீதி வழியாக வலம் வந்து மீண்டும் கீழ மாசி வீதியை வந்தடையும். “ஹரஹர சங்கர, ஜெய ஜெய சங்கர..மஹாதேவா…சொக்கேசா…சுந்தரேசா” என்ற கோஷம் முழங்க பக்தர்கள் தேரை இழுத்துச் சென்றனர்.

The post விண்ணை பிளந்த சிவ கோஷங்கள்: சித்திரை தேரோடும் மதுரையிலே… பக்தர்கள் பரவசம்..!! appeared first on Dinakaran.

Related Stories: