பல்லடம் அரசு பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

 

பல்லடம், மே.4: பல்லடம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 2002ம் ஆண்டு 10ம் வகுப்பு மற்றும் 2004ம் ஆண்டு 12ம் வகுப்பு படித்த முன்னாள் மாணவ,மாணவிகள் 20 ஆண்டுகளுக்கு பின்னர் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்வில் பணி ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் மற்றும் தற்போது பணியாற்றும் ஆசிரியர்கள், அரசு கல்லூரி முதல்வர் முனியன், 100 மாணவ, மாணவிகள் அவர்களது குழந்தைகள்,கு டும்பத்தினர் உள்பட 300 பேர் கலந்து கொண்டனர்.

விழாவில் பங்கேற்ற ஆசிரியர்களுக்கு முன்னாள் மாணவர்கள் சால்வை அணிவித்து நினைவு பரிசுகளை வழங்கி தங்களை அறிமுகம் செய்து கொண்டு நல்லாசி பெற்றனர். குடும்ப வாழ்க்கை குறித்து ஆசிரியர்கள் அறிவுரைகள் கூறி பேசினார்கள். விளையாட்டு போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்கப்பட்டது.

The post பல்லடம் அரசு பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு appeared first on Dinakaran.

Related Stories: