இயற்கை எழில் கொஞ்சும் கேரளாவில் புதிதாக தொடங்கப்பட்ட வாட்டர் மெட்ரோ ரயில் சேவைக்கு அமோக வரவேற்பு..!!

கேரளாவில் புதிதாக துவக்கப்பட்ட கொச்சி வாட்டர் மெட்ரோ படகு போக்குவரத்து உள்ளூர் மக்கள் மட்டுமின்றி வெளிமாநில சுற்றுலா பயணிகளிடமும் அமோக வரவேற்பு பெற்றுள்ளது. கேரளாவில் கடலையொட்டி தனி தீவு போல் காட்சியளிக்கும் எழில் நகரமான கொச்சியில் 10 தீவுகளை ஒன்றிணைக்கும் வகையில் வாட்டர் மெட்ரோ படகு சேவை தொடங்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு படகிலும் 100 பேர் பயணித்து செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. சுமார் 50,000 பேர் பயணம் செய்துள்ளனர். மெட்ரோ ரயில்களை போல் கண்ணாடிகளால் மூடப்பட்ட குளிரூட்டப்பட்ட சொகுசு படகுகளில் அமர்ந்தபடி இயற்கையின் அழகை ரசித்து வருகின்றனர்.

The post இயற்கை எழில் கொஞ்சும் கேரளாவில் புதிதாக தொடங்கப்பட்ட வாட்டர் மெட்ரோ ரயில் சேவைக்கு அமோக வரவேற்பு..!! appeared first on Dinakaran.

Related Stories: