ஆர்.எஸ்.மங்கலம் அருகே சூசையப்பர் ஆலய தேர் பவனி

 

ஆர்.எஸ்.மங்கலம், மே 3: ஆர்.எஸ்.மங்கலம் அருகே வெளியக்கோட்டை கிராமத்தில் புனித சூசையப்பர் ஆலயத்தின் தேர் பவனி விழா நடைபெற்றது. விழாவை முன்னிட்டு பங்கு தந்தை அன்பரசன் தலைமையிலான பங்கு தந்தையர்களால் விஷேச கூட்டுத் திருப்பலியும் நடைபெற்றது. திருப்பலி முடிந்து புனித சூசையப்பர் தேர் பவனி முக்கிய வீதிகள் வழியாக உலா வந்தது.

இந்நிகழ்வில் ஏ.ஆர்.மங்கலம் பங்கு இறை மக்கள் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதி மக்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை வெளியக்கோட்டை கிராமப் பொதுமக்கள்,இளைஞர் மன்றத்தினர் மற்றும் மகளிர் மன்றத்தினர் செய்திருந்தனர்.

The post ஆர்.எஸ்.மங்கலம் அருகே சூசையப்பர் ஆலய தேர் பவனி appeared first on Dinakaran.

Related Stories: