தூத்துக்குடியில் மாற்றுத்திறனாளிகள் விளையாட்டு போட்டி

 

தூத்துக்குடி:தூத்துக்குடியில் மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டு போட்டிகளை அமைச்சர் கீதாஜீவன் தொடங்கி வைத்தார்.தூத்துக்குடி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் விளையாட்டு கூட்டமைப்பு மற்றும் தமிழ்நாடு வீல்சேர் கிரிக்கெட் அசோசியேசன் இணைந்து நடத்திய மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டு போட்டி தூத்துக்குடி தருவை விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.

இப்போட்டிக்கான தொடக்க விழாவில், சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் சிறப்புவிருந்தினராக கலந்துகொண்டு போட்டிகளை தொடங்கி வைத்தார். இதில், மாவட்ட விளையாட்டு அலுவலர் அந்தோணி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சிவசங்கர், தமிழ்நாடு கிரிக்கெட் அசோசியேசனின் தூத்துக்குடி மாவட்ட செயலாளர் சிவக்குமார், வீல்சேர் கிரிக்கெட் அசோசியேசன் ஒருங்கிணைப்பாளர் துரைபாண்டியன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

The post தூத்துக்குடியில் மாற்றுத்திறனாளிகள் விளையாட்டு போட்டி appeared first on Dinakaran.

Related Stories: