மே தினத்தையொட்டி சென்னையில் மதுபானக்கடைகளுக்கு விடுமுறை: மாவட்ட ஆட்சியர் அமிர்த ஜோதி உத்தரவு

சென்னை: மே தினத்தை முன்னிட்டு வரும் 1ம் தேதி சென்னையில் உள்ள அனைத்து மதுபானக்கடைகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் அமிர்தஜோதி உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து, அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: மே தினத்தை முன்னிட்டு, தமிழ்நாடு மதுபான சில்லறை விற்பனை விதிகளின் கீழ், சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து ‘டாஸ்மாக்’ கடைகள் மற்றும் அனைத்து விதமான ‘பார்’கள் வரும் 1ம் தேதி (திங்கட்கிழமை) கண்டிப்பாக மூடப்பட வேண்டும்.

அன்றைய தினம் மதுபானம் விற்பனை செய்யக்கூடாது என இதன் மூலம் அறிவிக்கப்படுகிறது. தவறினால் மதுபான விற்பனை விதிமுறைகளின்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் உத்தரவிட்டுள்ளார்.

மேலும் மே தினத்தை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டத்தில் அனைத்து அரசு டாஸ்மாக் மதுபான கடைகள், அரசு டாஸ்மாக் மதுபானக் கூடங்கள், தனியார் மதுபானக் கூடங்கள் வரும் திங்கட்கிழமை இயங்காது என மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ் அறிவித்துள்ளார்.

The post மே தினத்தையொட்டி சென்னையில் மதுபானக்கடைகளுக்கு விடுமுறை: மாவட்ட ஆட்சியர் அமிர்த ஜோதி உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: