சமுத்திரம் அரசு தொடக்கப்பள்ளிக்கு காம்பவுண்ட் அமைக்க கோரிக்கை

 

மணப்பாறை: சமுத்திரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு சுற்றுச்சுவர் வேண்டி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருச்சி மாவட்டம், மணப்பாறை அடுத்த சமுத்திரம் ஊராட்சியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் சுமார் – 130 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளிக்கு சுற்றுச்சுவர் இல்லை. மேலும் பள்ளியின் பின்புறம் செடி கொடிகள் மண்டி உள்ளன. இதனால் இப்பகுதியில் பாம்பு போன்ற விஷ ஜந்துக்கள் பள்ளிக்குள் சென்று விடுவதால் பள்ளி மாணவ, மாணவிகள் அச்சம் அடைந்துள்ளனர். எனவே மாணவர்களின் பாதுகாப்பு கருதி இப்பகுதியில் மண்டியிருக்கும் புதர்கள் மற்றும் குப்பைகளை அகற்றுவதுடன், பள்ளியினை சுற்றி சுற்றுச்சுவர் கட்ட வேண்டும் என்று பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post சமுத்திரம் அரசு தொடக்கப்பள்ளிக்கு காம்பவுண்ட் அமைக்க கோரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: