விழுப்புரம் அருகே உள்ள தொடக்கப்பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் குறித்து ஆய்வு செய்தார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்..!!

விழுப்புரம் அருகே உள்ள தொடக்கப்பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு செய்தார். இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தியில்; இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விழுப்புரம் மாவட்டத்திற்குட்பட்ட மருத்துவமனை வீதி மற்றும் பூந்தோட்டம் நகராட்சித் தொடக்கப்பள்ளிகளில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் குறித்து திடீர் ஆய்வு மேற்கொண்டார்கள். ஆய்வின் போது, அமைச்சர் அவர்கள் நகராட்சி தொடக்கப்பள்ளி மாணவ, மாணவியருக்கு உணவினை பரிமாறினார். ஆசிரியர்கள் மற்றும் குழந்தைகளிடம் உணவு சுவையாக மற்றும் தரமாக உள்ளதா என கேட்டறிந்தார்.

The post விழுப்புரம் அருகே உள்ள தொடக்கப்பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் குறித்து ஆய்வு செய்தார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்..!! appeared first on Dinakaran.

Related Stories: