பெயர்களை வைத்து சமூக அடையாளம் அறியும் சூழ்நிலை இந்திய சமூகத்தில் உள்ளது. துரதிருஷ்டம். ஆனாலும் இங்கு அதுவே பாரபட்சத்தை வெளிக் கொண்டும் வருகிறது. முதல்வர் பதவிக்கு நேர்காணல் அழைக்கப்பட்ட பழங்குடியினர் 58 பேரில் 28 மீனாக்கள் உள்ளனர். ஆனால் 327 பொதுப் பட்டியல் தேர்வர்களில் ஒரு மீனா கூட இல்லை. இது அப்பட்டமாக தெரிகிற ஒரு உதாரணமே. வெளிப்படையான பட்டியல் ஆக இது இல்லை. எத்தனை ஓபிசி, எஸ்சிஎஸ்டி தேர்வர்கள் பொதுப்பட்டியலில் இடம் பெற்றுள்ளனர் என்பதை கேந்திரிய வித்யாலயா சங்காதன் தெரிவிக்க வேண்டும். ஆகவே கேந்திரிய வித்யாலயா இந்த நியமனங்களை முழு ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும். அதற்கு பின்னரே இறுதி தேர்வுப் பட்டியலை வெளியிட வேண்டும். தமிழர்களுக்கும், ஓபிசி, எஸ்.சி, எஸ்.டி பிரிவினருக்கும் அநீதி இழைக்கப்படாமல் உறுதி செய்ய வேண்டும் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
The post கேந்திரிய வித்யாலயா பள்ளி பணிநியமனத்தில் தமிழருக்கு அநீதி: ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு சு.வெங்கடேசன் கடிதம்..! appeared first on Dinakaran.