இதுகுறித்து பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியதாவது: தேர்வு முடிவுகளை மே 5ம் தேதி வெளியிட ஏற்கனவே தேர்வு துறை அறிவித்திருந்தது. ஆனால் பட்டியல் தயாரிக்கும் பணிகள் குறிப்பிட்ட தேதியில் முடியாது என்பதால் மே 7ம் தேதி வெளியிட திட்டமிடப்பட்டது. அதே நேரம் மே 7ம் தேதி நீட் தேர்வு நடைபெற உள்ளது. அதனால் முதல்வருடன் ஆலோசித்து பின்னர் புதிய தேதி அறிவிக்கப்படும். திட்டமிட்டபடி மே 5ம் தேதி தேர்வு முடிவு வெளியானால் மாணவர்களின் மனநிலை பாதிக்கப்படலாம். அதனால் 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.
The post பிளஸ் 2 தேர்வு முடிவு தேதி மே 7ல் அறிவிப்பு: அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தகவல் appeared first on Dinakaran.