அருப்புக்கோட்டையில் பியூட்டி பார்லர் திறப்பு விழா

 

அருப்புக்கோட்டை, ஏப். 24: அருப்புக்கோட்டை ரயில்வே பீடர் ரோட்டில்லோட்டஸ் பியூட்டி பார்லர் திறப்புவிழா நடந்தது. விருதுநகர் தெற்கு மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ஆர்.ரமேஷ் தலைமை வகித்தார். முன்னாள் ஒன்றிய சேர்மன் சுப்பாராஜ், முன்னாள் நகர்மன்ற தலைவர் சிவப்பிரகாசம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விளையாட்டு மேம்பாட்டு அணி மாவட்ட துணை அமைப்பாளர் கோகுல் வரவேற்றார்.

நகர் மன்றதலைவர் சுந்தர லட்சுமி சிவப்பிரகாசம் புதிய பியூட்டி பார்லரை குத்துவிளக்கேற்றி திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் முன் முன்னாள் எம்எல்ஏ விஜயகுமார், நகர திமுகசெயலாளர் ஏ.கே.மணி, மாநில நெசவாளர் அணிசெயலாளர் பழனிச்சாமி, ஒன்றிய சேர்மன் சசிகலா பொன்ராஜ், ஒன்றிய செயலாளர்கள் பொன்ராஜ், பாலகணேசன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் பாபுஜி, ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர்கள் தங்கமணி அழகு ராமானுஜம் நகராட்சி கவுன்சிலர்கள் தமிழ்காந்தன்,மணிமுருகன், சங்கீதா டூவிங்கிளின் ஞான பிரபா, மீனாட்சி, மீனா, ஜோதி ராமலிங்கம், சிவகாமி, விளையாட்டுமேம்பாட்டு அணி துணை அமைப்பாளர் இளங்கோ, மாவட்ட ஆதிதிராவிட அணி அமைப்பாளர் சோலையப்பன், மாவட்ட பிரதிநிதி கண்ணன், உட்பட பலர் கலந்து கொண்டனர். நிறைவாக சித்ரா நன்றி கூறினார்

The post அருப்புக்கோட்டையில் பியூட்டி பார்லர் திறப்பு விழா appeared first on Dinakaran.

Related Stories: