அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கமலக்கண்ணனை கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், கொருக்குப்பேட்டையை சேர்ந்த பிரபல ரவுடி கருப்பு குமார் 6 பேர் கும்பலால் நேற்று வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இவரது இறுதிச்சடங்கில் கலந்துகொள்வதற்காக வந்தபோது, மதுபோதையில் கமலக்கண்ணனுக்கும், ராஜசேகருக்கும் தகராறு ஏற்பட்டு ஒருவரை ஒருவர் சரமாரி தாக்கிக்கொண்டது தெரியவந்தது. கைது செய்யப்பட்ட கமலக்கண்ணன், 6 பேர் கும்பலால் கொலை செய்யப்பட்ட பிரபல ரவுடி கருப்பு குமாரின் மைத்துனர் என்பதும் தெரியவந்துள்ளது. இதையடுத்து கைது செய்யப்பட்ட கமலக்கண்ணனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நேற்று புழல் சிறையில் அடைத்தனர். இந்நிலையில் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த ராஜசேகர், சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை பரிதாபமாக இறந்தார். இதனால் கொலை வழக்காக பதிவு செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் கொருக்குப்பேட்டை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
The post கொருக்குப்பேட்டையில் ரவுடி இறுதிச்சடங்கில் தகராறு; முகத்தில் கல்லால் அடித்து கூலி தொழிலாளி படுகொலை: வாலிபர் சிறையிலடைப்பு appeared first on Dinakaran.